Sangam period

தாகத்துக்கு தண்ணீர்  கொடுக்க மறுத்ததால் உயிர் விட்ட மன்னர்:

சேரமான் கணைக்கால் இரும்பொறையும் சோழ மன்னன் செங்கணானும் பெரும்படையுடன் திருப்போர்புறம் என்னுமிடத்தில் போரிட்டனர்.  போரின் முடிவில் சேரமான் தோற்று, கைது செய்யப்பட்டு நாயைப் போல் சங்கிலியால் பிணைக்கப்பட்டு குடவாயிற்கோட்டச் சிறையில் அடைக்கப்பட்டான்.  சிறையில் ஒருநாள் சேரமான் தாகமுற்று, காவலர்களை நீர் கொடுக்குமாறு கேட்டான். சேரமானை அவமதிக்கும்படி சிறைக்காவலன் சில நேரம் கழித்து நீர் கொண்டு வந்து கொடுத்தான்.   அவமானம் அடைந்த மன்னன் வருந்தி தண்ணீர் குடிக்க
மறுத்து உயிர் விட்டார்

Comments