விழி பிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள் நம் நாட்டு மன்னர்களுக்கு மட்டுமே தெரிந்த திடுக்கிடும் ரகசியங்கள்


இந்தியா என்றாலே ஆன்மீகத்துக்கும், அரசியலுக்கும் பெயர் பெற்றது என்று உலக அளவில் பேசிக்கொள்கிறார்கள்.அந்த அளவுக்கு உலகுக்கே கலாச்சாரம் பண்பாடு கற்றுத் தந்த இந்தியாவில் அது மட்டுமா.. அதனுடன் இணைந்த மர்மங்களும், அவிழ்க்கப்படாத முடிச்சுகளும் நிறைந்தே உள்ளன.
சாயா சோமேஸ்வரர் கோயில்
வெளிநாட்டு விஞ்ஞானிகளும் விழிபிதுங்கி வேடிக்கை பார்க்கும் அளவுக்கு பல அதிசயங்களை கொண்டுள்ளது இந்த கோயில்.கண்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் அமைப்பில் மூன்று கருவறைகள் உள்ளது. அந்த மூன்று கருவறைகளிலும் மூன்று விதமான மர்மங்கள் உள்ளது.இதன் முதல் கருவறை லிங்க கருவறை ஆகும். இங்குள்ள லிங்கத்துக்குப் பின்னால் ஒரு தூணின் நிழல் காணப்படும்.நிழலில் என்ன அதிசயம் என்றால் காலை முதல் மாலை வரை அந்த நிழல் அசைவதே இல்லை.மர்மம் என்னவென்றால் இரவு நேரத்தில்கூட அந்த நிழல் இந்த இடத்தை விட்டு மறைவதே இல்லை.இரண்டாவதாக உள்ள கருவறை பிரம்மா கருவறை ஆகும். இந்த கருவறைக்கு எதிரே ஒருவர் நின்றால் அவர் தனது நான்கு நிழல்களை பார்க்கமுடியும்.எப்படி ஒரு உருவத்துக்கு நான்கு நிழல்கள் உருவாகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.லிங்கக் கருவறைஇது மூன்றாவது கருவறை ஆகும். இந்த கருவறைக்கு எதிரே ஒருவர் நின்றால் அவரின் நிழல் அவருக்கு எதிரே எப்போதும் விழும் அதிசயம் இங்கு நிகழ்கிறது.நிழல் எப்படி எதிர்த்திசையில் விழும் என்பது ஆராய முடியாத ஒன்றாகவே உள்ளது.

Comments

Popular Posts